உயிரிழந்த ராஜா
உயிரிழந்த ராஜா  
க்ரைம்

பழிவாங்கிய பலகாரச் சீட்டு... பணத்தைத் திருப்பி தரமுடியாத விரக்தியில் போக்குவரத்து ஊழியர் எடுத்த பொல்லாத முடிவு!

காமதேனு

திருச்சி அருகே, பலகாரச் சீட்டு நடத்தி வந்த போக்குவரத்து ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத விரக்தியில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கவரப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர் சென்னையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்துவந்தார். இவருக்கு திருமணம் ஆகி வினோதினி என்ற மனைவி உள்ளார். ராஜா கவரப்பட்டி பகுதி பொதுமக்களிடம் தீபாவளிக்கான பலகாரச் சீட்டு மற்றும் சிறுசேமிப்புச் சீட்டு நடத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி அளவில் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோப்புப்படம்

இந்தநிலையில் சீட்டு கட்டிய வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் இது குறித்து அப்பகுதியினர் சிலர் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி தகவல் தெரிந்த ராஜா, பணம் கொடுக்க முடியாத விரக்தியில் நேற்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துத் கொண்டார்.

கோப்புப்படம்

பலத்த தீக்காயம் அடைந்த ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ராஜா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராஜாவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு காட்டுப்புத்தூர் போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

SCROLL FOR NEXT