'லியோ' திரைப்படத்தில் விஜய்  
சினிமா

பரபரப்பு...'லியோ' திரைப்படம் தொடர்பாக அடுத்த வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காமதேனு

'லியோ' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா நடித்திருக்கும் 'லியோ' திரைப்படம் உலகெங்கிலும் நாளை(அக்.19) வெளியாக உள்ளது.

இந்த படத்தை சட்டவிரோதமாக 1246 இணையதளங்களில்  வெளியிடுவதை தடைவிதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் ஸ்டியோ நிறுவனத்தின் இயக்குனர் லலித்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, 'லியோ' நாடு முழுவதும்  1,500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கும்  உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

SCROLL FOR NEXT