'ஜெய்பீம்’ 
சினிமா

#2YearsOfJaibhim : முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன நடிகர் சூர்யா!

காமதேனு

’ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நடிகர் சூர்யா, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 2 அன்று ஓடிடி தளத்தில் வெளியானது. ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு ஓடிடியில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் நல்ல பெயரைக் கொடுத்தது. படம் பாராட்டுகளைப் பெற்று ஆஸ்கர் வரை சென்றது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ''ஜெய்பீம்’ திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம்.

நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இதற்கு, ‘உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம். அன்பின் கொடி ஏற்றிவைக்க துணை சேரும் கோடி கரம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT