பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் வளமான வாழ்க்கை; பிரிந்தவர்கள் சேருவர்; பண வரவு உண்டு; முருக வழிபாடு!

பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் வளமான வாழ்க்கை; பிரிந்தவர்கள் சேருவர்; பண வரவு உண்டு; முருக வழிபாடு!

பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் வாழ்க்கை வளம் முன்னேறும். அதேவேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வயிறு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் உங்களை வந்தடையும்.

குடும்பத்தில் இருந்து வந்த சின்னச் சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். தந்தை, தந்தை வழி உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். சுபச் செலவுகள் நிகழும். சாகோதர சகோதரிகளிடம் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுத்தினால், குடும்பத்தில் சிக்கலைத் தீர்க்கும்.

தொழிலதிபர்களின் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்துச் செய்யப்படும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதேநேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி கிடைக்கும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு அக்கம்பக்கத்தார் இடையே ஒற்றுமை பலப்படும். பொருளாதார வலிமை கூடும். அதேவேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்புகளும் ஏற்படலாம். நண்பர்களிடம் பழகும்போது எச்சரிக்கை தேவை.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். எதிலும் சாதிக்க வேண்டி கடினமான உழைப்புக்கு ஆளாவீர்கள். மூத்த கலைஞர்கள் உங்களிடம் உள்ள திறமைகளைப் புரிந்து கொள்வார்கள். நன்மைகள் சிறிது தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கும்.

அரசியல்துறையினர் மற்றும் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும் காலகட்டம் இது. பொது இடத்தில் பேசும்போது கவனம் தேவை. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். சிலருக்கு மேல் படிப்பில் விரும்பிய பாடங்கள் கிடைக்கும்,

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அரளி மாலை சார்த்தி வணங்குங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in