சீர்காழி அருகே, திருமுல்லைவாசல் சாலையில் உள்ள வேட்டங்குடி பிரிவில் இருக்கும் பஷீர் கடை அப்பகுதி ஏழை எளிய மக்களின் அன்றாடப் பசியைப் போக்குகிறது. 2 ரூபாய்க்கு ஒரு இட்லி கிடைப்பதால், 10 ரூபாய் இருந்தால் போதும் 5 இட்லியில் வயிறு நிறைந்து விடுகிறது. 2 வகை சட்னியுடன் கேட்க கேட்க சாம்பார் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கூலி வேலைக்குப் போகும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தில் சிறு வணிகம் செய்பவர்கள் என அத்தனை பேரும் இந்தக் கடையால் குறைந்த செலவில் பசியாறிச் செல்கிறார்கள்.