கேரள அரசு லாட்டரியில் விழுந்த ரூ.25 கோடி... பரிசுத்தொகையை பெற முடியாமல் தவிக்கும் தமிழர்கள்!

கேரளா லாட்டரி சீட்டுகள்
கேரளா லாட்டரி சீட்டுகள்

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசு வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு, அந்த பரிசுத் தொகை ரூ. 25 கோடியைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஓணம் பம்பர் லாட்டரியின் சீட்டுக் குலுக்கல் செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற்றது. இதில், திருப்பூரைச் சேர்ந்த நான்கு பேர் வாங்கிய சீட்டுக்கு பம்பர் பரிசு 25 கோடி கிடைத்தது. இந்த நிலையில், முகவரின் கமிஷன் மற்றும் வரிகளுக்குப் பிறகு, பம்பர் பரிசு வென்றவருக்கு ரூ. 14 கோடி வழங்கப்படும்.

பம்பர் பரிசு பெற்ற டிக்கெட் தமிழகத்தில் முறைகேடாக விற்கப்பட்டதாக எழுந்த புகாரை விசாரித்து விட்டு, பிற மாநிலங்களில் இருந்து வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  அம்மாநில மக்களால் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா லாட்டரி சீட்டுகள்
கேரளா லாட்டரி சீட்டுகள்

அதனால் பரிசுத் தொகையை வழங்குவதற்கு முன், பிற மாநிலங்களில் இருந்து பரிசு வென்றவர்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் துறையின் குழு ஆய்வு செய்யும் என்று கேரள லாட்டரி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

பரிசு பெற்ற டிக்கெட்டை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு மார்க்கெட்டிங் மோசடியில் இருந்து வாங்கியதாக தனிநபர் ஒருவர் புகார் அளித்தபோதும், அவர் இது தொடர்பாக எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

மேலும், தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள கேரளா லாட்டரி கடைகளில் தமிழகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள்  நாளொன்றுக்கு பல லட்சம் மதிப்பிலான  லாட்டரிகளை வாங்கிச் செல்வது வாடிக்கையாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in