
ஒட்டுமொத்த மலையாளிகளும் மகிழ்ச்சிப் பெருக்கில் இருக்கின்றனர். பாம்பு மீட்பர் வாவா சுரேஷ் நலமுடன் மீண்டுவர தாங்கள் செய்த பிரார்த்தனைகள் கைகூடி இருப்பதால், எழும் மகிழ்ச்சி இது. இதுவரை, மனிதர்களின் வாழ்விடத்துக்குள் புகுந்த 36 ஆயிரம் பாம்புகளை மீட்டு வனத்துக்குள் விட்டிருக்கும் வாவா சுரேஷ், ஆயிரம் தடவையேனும் அந்தப் பாம்புகளால் தீண்டவும் பட்டிருப்பார்.
இப்போது இணைய உலகின் வாசல்கள் அகல திறந்திருப்பதால் செல்போன் வீடியோ பதிவுகளால், சமீபத்தில் அவரை பாம்பு தீண்டிய சம்பவம் வைரலானது. வாவா சுரேஷ் எளிய மனிதர். பொருளாதார பலம் இல்லாதவர். ஆனாலும், அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் சேவையாகவே இந்தப் பணியை மனதார செய்துவருகிறார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.