
கௌரவர்களுடன் சூதாடி நாட்டையும் தன்னையும் தொலைத்த தருமர், அத்துடன் விடாமல் விட்டதைப் பிடிக்கிறேன் என மனைவி திரௌபதியையும் வைத்து சூதாடி தோற்றதாக இதிகாசம் சொல்கிறது. இப்போதும் அப்படித்தான் விட்டதைப் பிடிக்கிறேன் என ஆன்லைன் சூதாட்டத்தில் சொத்து, சுகம், குழந்தைகள், மனைவி என அத்தனையும் இழந்து கடைசியில் தங்கள் இன்னுயிரையும் இழக்கும் பரிதாப நிலைக்கு பலர் ஆளாகிவருகிறார்கள்.
எத்தனை மரணங்கள்?
சென்னையை அடுத்த பெருங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). தனியார் வங்கி அதிகாரி. மனைவி, இரண்டு மகன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் திடீரென கிரிக்கெட் மட்டையால் தனது அன்பு மனைவி பிரியாவை மணிகண்டன் அடித்துக் கொல்கிறார். தனது பாசமிகு இரண்டு குழந்தைகளையும் தலையணையால் அழுத்திக் கொலை செய்கிறார். கடைசியில் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விசாரணையில், பலரிடம் கடன் வாங்கி 75 லட்ச ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் மணிகண்டன் மனமுடைந்து இந்த முடிவுக்கு வந்தது தெரியவந்தது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.