இழப்பை தாங்க முடியவில்லை... கணவர் உடலில் சாய்ந்தப்படி உயிரிழந்த மனைவி

உயிரிழந்த தம்பதி
உயிரிழந்த தம்பதி

மயிலாடுதுறை அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனமொத்து வாழ்ந்த வயோதிக தம்பதியினர் ஒரேநாளில் உயிரிழந்திருப்பது உறவினர்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நல்லத்துக்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (88). வயது மூப்பின் காரணமாக இவர் நேற்று மதியம் உயிரிழந்தார். கணவர் இறப்பு தாங்கமுடியாமல் நேற்று மதியம் முதல் அவரது மனைவி 83 வயதான மருதாம்பாள் தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் மருதாம்பாள் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி சடலத்தின் மேல் மயங்கி விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இந்த  தம்பதிக்கு திருமணம் நடைபெற்று 50 ஆண்டுகள்  இல்லற  வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

உயிரிழந்த கணவன், மனைவி
உயிரிழந்த கணவன், மனைவி

கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண ஆன நாள் முதல் இதுநாள் வரை இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும்  வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இணைபிரியாத  தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில்  தனது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவியும்  உயிரிழந்துள்ளார்.  கணவர், மனைவி இருவரின் இறப்பு  செய்தி கேட்டு உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in