
சில புள்ளிவிவரங்களை மேம்போக்காகப் பார்க்கும்போது அவை சாதகமான விஷயங்களை முன்வைப்பதாக நமக்குத் தோன்றும். ஆனால், நடைமுறை சார்ந்து தர்க்கபூர்வமாக அவற்றை அணுகும்போது கிடைக்கும் சித்திரம், அதற்கு முற்றிலும் எதிர்மறையானதாக இருப்பதை உணர முடியும். பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என வெளியாகியிருக்கும் புள்ளிவிவரங்களும், அதன் பின்னணியில் இருக்கும் கசப்பான காரணிகளும் இதற்கு ஓர் உதாரணம்.
புள்ளிவிவரமும் கள நிலவரமும்
தேசியப் புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிடும் 2020-21-ம் ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு (பிஎல்எஃப்எஸ்) புள்ளிவிவரம், கடந்த மாதம் வெளியானது. அதன்படி, இந்தியாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 53.95 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 2019-20-ல் இருந்ததைவிட 2.62 கோடி தொழிலாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதில் ஆண்கள் 1.08 கோடி. பெண்கள் 1.53 கோடி என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். கிராமப்புறங்களில் 2019-20-ல் இருந்ததைவிட, 2020-21 காலகட்டத்தில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் எனும் நிலையில், இந்தப் புள்ளிவிவரம் மகிழ்ச்சியளிப்பதாகவே நமக்குத் தோன்றும். ஆனால், களநிலவரமும் மும்பையிலிருந்து செயல்படும் ‘இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்’ (சிஎம்ஐஇ) போன்ற தனியார் அமைப்புகள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களும் நமக்குக் காட்டும் சித்திரம் வேறு மாதிரியானது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.