குட்நியூஸ்...ரேஷன் கடைகளில் 1,000 ரூபாய் ரொக்கம், பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது!

பொங்கல் தொகுப்பு வழங்கும் முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)
பொங்கல் தொகுப்பு வழங்கும் முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பங்களுக்கு அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடங்கப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

பயனாளிகள்(கோப்பு படம்)
பயனாளிகள்(கோப்பு படம்)

பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில்தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

பொங்கல் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், 2.19 கோடி  ரேஷன்  அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.

பயனாளிகள்( கோப்பு படம்)
பயனாளிகள்( கோப்பு படம்)

இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் பயனாளிகளுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள்  செய்து முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்குகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.  தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் பிரதிநிதிகள் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்கின்றனர்.
எதிர்வரும் 13-ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. விடுபட்டவர்கள் 14-ம் தேதி அன்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in