இசைவலம்: இசைஞானி விதைக்கும் நம்பிக்கை!

இசைவலம்: இசைஞானி விதைக்கும் நம்பிக்கை!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

கரோனா பெருந்தொற்றுப் பேரிடருக்கு எதிராகப் போராடிவரும் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதத்தில், இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் ‘பாரத பூமி ஒரு புண்ணிய பூமி’. கடந்த ஆண்டு வெளியான இந்தப் பாடலில், தாய் வேறு தாய்நாடு வேறு என்பதில்லை என்பதை உணர்ச்சி பொங்க வார்த்தையாக வடித்துள்ளார் இளையராஜா. பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருக்கமாகவும் இனிமையாகவும் பாடியுள்ளார். நமக்கெல்லாம் நம்பிக்கை தந்த எஸ்பிபி இதே பெருந்தொற்றுக்குப் பலியானதுதான் சோகம்!

மத்திய அரசின் சார்பாக கரோனா விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்ட இந்தப் பாடலின் இந்தி வடிவத்தை பாலிவுட் பாடகர் ஷான் பாடியுள்ளார். ஜூன் மாதம் முதல் வாரம் இளையராஜா, எஸ்பிபி என இரு மேதைகளின் பிறந்தநாள் வந்ததையொட்டி இந்தப் பாடல் மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

‘பாரத பூமி ஒரு புண்ணிய பூமி
நாமதன் புதல்வர் அதை மறந்திட வேண்டாம்
சோதனை காலத்தில் சோர்வை தூக்கியே எறியலாம்
எதிர்த்து நிற்கலாம் எதையும் தாங்கலாம்…’ 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in