மகன் மாவீரன் பிரபாகரனுக்கு காதுகுத்து- தம்பிகளுக்கு தடபுடல் விருந்து கொடுத்த சீமான்!

மகன் மாவீரன் பிரபாகரனுக்கு காதுகுத்து- தம்பிகளுக்கு தடபுடல் விருந்து கொடுத்த சீமான்!

கே.சோபியா
readers@kamadenu.in

சீமான் வீட்டு ‘கிடாவெட்டு - காதுகுத்து' நிகழ்ச்சியை, கட்சி மாநாடு போல கலகலப்பாக நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

‘நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை கடந்த 8.9.2013 அன்று தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 11.1.2019 அன்று  இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. “மகள்தான் பிறப்பாள் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தேன். இன்ப அதிர்ச்சியாக பையன் வந்து பிறந்திருக்கிறார். அவருக்கு தமிழ் தேசியத் தலைவரான மாவீரன் பிரபாகரனின் பெயரைச் சூட்டியிருக்கிறோம். பிள்ளைக்கு 2 வயதானதும் காளையார்கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற முடிக்கரை காளிகோயிலில் முடியிறக்கி காதுகுத்துவோம்” என்று சொல்லியிருந்தார் சீமான்.

அதன்படி தன் மகனுக்கு காதுகுத்த நாள் குறித்த சீமான், அதற்கான அழைப்பிதழை சற்றே வித்தியாசமாக வீடியோவாக வெளியிட்டார். அதில்,  ‘வரும் மாசி 3-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலுக்கு அருகில் முடிக்கரை கிராமத்தில் இருக்கின்ற எங்கள் குல தெய்வமான வீரமாகாளியம்மன் கோயிலில் வைத்து, எங்கள் அன்பு மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடியிறக்கி காதணி விழா நடைபெற இருக்கிறது. என் உயிரினும் இனிய உடன்பிறந்தார்கள், எனது அன்பு உறவுகள் என் தம்பிகள் தங்கைகள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று அவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்’ என்று அழைத்திருந்தார் சீமான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in