
ராம் சர்மா
ovmtheatres@gmail.com
‘புதையல்’ என்னும் வார்த்தைக்கு வசமிழக்காதவர் யார் ?
பொதுவாக காணாப் பொருளைக் காணப் போகிறோம் என்றவுடன் பரவசமாகி விடுகிறார்கள் மனிதர்கள். அந்தப் பொல்லாத பரவசத்தால் ஹார்மோன் பேலன்ஸ் தவறிப்போக படபடப்புக்கு ஆளாகிறார்கள்.
படபடப்புக்கு ஆட்பட்ட மனிதர்கள் அவசரப்படுகி றார்கள். ஆசை வயப்படுகிறார்கள். அந்த ஆசையின் உச்சம் உடோஃபிய உலகம். அதன்பின் அந்த மாய உலகிலிருந்து மீள்வது கடினம்.