20% போனஸ் கேட்டு போக்குவரத்து ஊழியர்கள் 3 நாள் போராட்டம்... பேருந்து சேவை முடங்கும் அபாயம்?

 மாநகரப் பேருந்துகள்
மாநகரப் பேருந்துகள்

தீபாவளிக்கு 20% போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள்  சார்பில் மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளியின்போது போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2020 முதல் 2022 வரை கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு 10% போனஸ் மட்டுமே வழங்கியது. தற்போது மத்திய அரசின் போனஸ் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச கூலியை கணக்கில் கொண்டு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியுசி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

போனஸ் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்னிறுத்தி  வருகின்ற அக்டோபர் 30, 31 நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் 12 மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

இந்தப் போராட்டம் சென்னை பல்லவன் சாலையில் அமைந்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற உள்ளது.  தமிழக முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  அதனால்  அந்த மூன்று நாட்களும் அரசு போக்குவரத்து கழக பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசும், போக்குவரத்துக்கழக நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸ் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான ஒரு நிலையை எட்ட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in