சீறிப் பாய்ந்தது 'ககன்யான்'... சரித்திரம் படைத்தது இஸ்ரோ!

ககன்யான்
ககன்யான்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை இன்று காலை 7.30 மணிக்கு ஏவப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. ஆனால், எதிர்பாராத வானிலை காரணமாக ககன்யான் ஷெட்யூல் காலை 8 மணிக்கு மாற்றப்பட்டது. இதைனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ககன்யான் விண்ணில் ஏவப்படுவது மேலும் தாமதமானது. உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு காலை 10.16-க்கு ககன்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதற்காக, கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டன.

ககன்யான்
ககன்யான்

பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, 2 அல்லது 3 நாட்கள் ஆய்வுப் பணி மேற்கொண்டு பிறகு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். வரும் 2025-ம் ஆண்டு இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ அண்மையில் வெளியிட்டது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு ககன்யான் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக ககன்யான் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன்பின் அப்பணிகள் முடிந்த பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in