
உலகிலேயே மிகவும் உயரமான இமயமலையின் சியாச்சின் பகுதியில் முதல் செல்போன் டவரை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவியுள்ளது.
உலகிலேயே மிகவும் உயரமான இமயமலையில் சியாச்சின் பகுதி உள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் அவ்வப்போது சண்டை போடும் இந்த பகுதியில் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் என்ற இந்திய ராணுவப் பிரிவினர் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சியாச்சின் பனிமலையில் முதல் செல்போன் டவரை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவியுள்ளது. இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் இந்த செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. "சியாச்சின் வாரியர்ஸ் பிஎஸ்என்எல்லுடன் இணைந்து, 15,500 அடிக்கு மேல் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மொபைல் மூலம் தொடர்பு கொள்ள, செய்தியை பரிமாறி கொள்ள இந்த டவர் உதவும். அக்டோபர் 6-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் பிடிஎஸ் என்ற இந்த டவர் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!