கரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவது ஏன்?- அமைச்சர் சொல்லும் முக்கிய காரணம்

`இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்'
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்twitter

"தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான் கரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்" என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை இன்று பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 74.11 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர். 1,71,616 சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 65 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இன்று பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளலாம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in