ஏகாம்பரநாதர் கோயில் சிலை கடத்தலில் ஈடுபட்டது யார் தெரியுமா?: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்

ஏகாம்பரநாதர் கோயில் சிலை கடத்தலில் ஈடுபட்டது யார் தெரியுமா?: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்

ஈரோட்டில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் மாவட்ட உலக சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற காவல் துறைத் தலைவர் பொன்.மாணிக்கவேல் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், " கோயில்களில் உள்ள பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் பணியையும் சிவனடியார்கள் செய்ய வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு முதல் இப்போது வரை உள்ள ஆட்சியாளர்கள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தெய்வ விக்ரகங்களைச் சட்டப்படி பதிவு செய்யத் தவறவிட்டனர். அந்த சட்டக் கடமையை நிறைவேற்ற சிவனடியார்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த ஆட்சியில் உச்ச நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை கடத்தலில் பெரிய, பெரிய அதிகாரிகள் சிக்கியுள்ளதால் வழக்கில் தாமதம் ஏற்படுகிறது. திருவாரூரில் 5 ஆயிரத்து 198 விக்ரகங்களின் உண்மைத் தன்மை கண்டறிந்ததில், 191 விக்ரகங்கள் போலி என்பது தெரிய வந்தது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in