வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி

வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி

சித்திரைத்திருவிழாவின் போது ஆற்றில் இறங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் இறங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சித்திரைத்திருவிழாவின் போது ஆற்றில் இறங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in