வளர்ப்பு யானைகள் இந்த ஆண்டில் ஜாலி... எடை பார்க்கும் நிகழ்வில் சுவாரஸ்யம்

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை சரிபார்க்கும் பணி துவக்கம்
முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை சரிபார்க்கும் பணி துவக்கம்

முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளின் எடை இவ்வாண்டு கூடியிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் என 2 யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தாயை பிரிந்த குட்டிகள், கும்கியாக இருந்து ஓய்வு பெற்ற யானைகள், மனிதர்களை மிதித்து கொன்றதாக பிடிக்கப்பட்ட யானைகள் என 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளின் உடல்நிலையை பரிசோதிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எடை சரிபார்க்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை சரிபார்க்கும் பணி துவக்கம்
முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை சரிபார்க்கும் பணி துவக்கம்

இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளியில் உள்ள எடைமேடையில் யானைகளுக்கு எடை போடும் பணி இன்று தொடங்கியது. இதில் இரு முகாம்களில் இருந்து யானைகள் கொண்டுவரப்பட்டு எடை போடப்பட்டது. அவ்வாறு எடை போடும் யானைகளுக்கு எடை கூடும் பட்சத்தில், கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டறிந்து, அந்த யானைக்கு நடைப்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை குறைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள்.

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை சரிபார்க்கும் பணி துவக்கம்
முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை சரிபார்க்கும் பணி துவக்கம்

மேலும் யானைகளுக்கு எடை குறையும் பட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு யானையை பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள். எடை போடும் பணி இன்று துவங்கியுள்ள நிலையில், கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ஒவ்வொரு யானையும் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in