சென்னை சென்ட்ரல் டு பெங்களுரூ... முதன் முறையாக இரவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்!

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களுரூக்கு இன்று இரவு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் இயக்குவது இது முதல் முறையாகும்.

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

பயணிகளின் கூட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளில் தென்னக ரயில்வே ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் இரவு நேர வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - பெங்களுரூ இடையே இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதுத் தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே வந்தே பாரத் ரயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது.

அந்தவகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (20-ம்தேதி) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு, பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, யஸ்வந்த்பூரில் இருந்து நாளை (21-ம்தேதி) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in