அதிகாலையிலே அதிர்ச்சி... சொகுசு பேருந்து கவிழ்ந்து துடிதுடித்த பயணிகள்... சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி!

கவிழ்ந்த பேருந்து நிமிர்த்தும் பணி
கவிழ்ந்த பேருந்து நிமிர்த்தும் பணி

சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து திருப்பூருக்கு இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே காளசமுத்திரம் என்ற இடத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. 

இதில் பேருந்துக்குள்ளேயே பயணிகள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் பொதுமக்கள் உதவியுடன்  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் உதவியுடன் நிமிர்த்தி சாலையோரம் கொண்டு வந்து ஒரு மணி நேரமாக தடைபட்டிருந்த போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in