இந்த வழித்தடத்தில் ரயிலை 30 கி.மீ வேகத்திலேயே இயக்க வேண்டும்: ரயில்வேதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த வழித்தடத்தில் ரயிலை 30 கி.மீ வேகத்திலேயே இயக்க வேண்டும்: ரயில்வேதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கஞ்சிக்கோடு - வாளையாறு  வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்க வேண்டுமென தென்னக ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் சோலார் விளக்கு அமைப்பதை தவிர மற்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு விட்டதாக கூறினர். 18 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் விளக்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை நிறுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடம் முக்கியமானது என்பதால் அது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க கூடாதென ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். கடினமான மலைப்பாதையில் ரயிலை இயக்கும் தொழில்நுட்பம் உள்ள போது  இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட வழித்தடத்தில் ஏற்படும் விபத்துக்களால் வருடத்திற்கு ஐந்து, ஆறு யானைகள் உயிரிழப்பதாக கவலை தெரிவித்தனர். எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் இரவில் ரயில்களை 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in