டிஎன்பிஎஸ்சி நடத்தும் கணினி வழித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் கணினி வழித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வை கணினி வழியாக டிஎன்பிஎஸ் நடத்த உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தமிழக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் வரும், 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளை நிரப்ப போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 19-ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியே நடைபெறுகிறது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 30) கடைசி ஆகும். இந்த தேர்வானது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு தேர்வு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் 2.05 லட்சம் வரை ஊதியம் பெறுவார்கள்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இதுவரை அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டுமே கணினி வழியில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வும் கணினி முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in