பொதுத் தேர்வின் போது மின் தடை இருக்கக்கூடாது: அலர்ட் செய்த மின்வாரியம்

பொதுத் தேர்வின் போது மின் தடை இருக்கக்கூடாது: அலர்ட் செய்த மின்வாரியம்

பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது. பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in