வைகை மக்கள் வெள்ளத்தில் சிக்கி இறந்த ஒருவரின் அடையாளம் தெரிந்தது

வைகை மக்கள் வெள்ளத்தில் சிக்கி இறந்த ஒருவரின் அடையாளம் தெரிந்தது

சித்திரைத்திருவிழாவின் போது ஆற்றில் இறங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதில் மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் இறங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக இறந்தவர்கள் மற்றும் மயக்கமானவர்களை காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் இறந்தவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டனர். மேலும் இறந்தவர்கள் குறித்தோ, ஆற்றில் காணமல் போனவர்கள் குறித்தோ 949804234 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இறந்த ஆணின் பையில் இருந்த ஏடிஎம் எண்ணை வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இறந்த 60 வயது மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in