சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

`எந்த ஆதாரமும் இல்லை!'- பார் டெண்டருக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி

டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்காக புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது. இந்த டெண்டர் நிபந்தனைகளில், பார்கள் அமைப்பதற்கான நிலத்தின் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் புதிய டெண்டர் அறிவிப்பை எதிர்த்து, பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, "விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். கட்டிட உரிமையாளர்களின் ஆட்சேபனையில்லா சான்று தேவையில்லை என கூறிவிட்டு, தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுகிறது. குறிப்பாக டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்ட 8 மாவட்டங்களை பொறுத்தவரை புதிய டெண்டர் கோரக்கூடாது என உத்தரவிட வேண்டும். ஒரு அதிகாரியை நியமித்து டெண்டர்களை திறக்க வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்" எனவ கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, நீதிபதி, ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, பார் டெண்டரை எதிர்த்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in