சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா
Updated on
1 min read

சென்னையில் திடீர் என கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

 சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா

அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அவர் உத்தரவிட்டார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா," மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் சராசரி மழையையும் எதிர்கொள்ள சென்னை தயாராகவே உள்ளது.

 சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா

மழை நேரத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.

மேலும் சென்னை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in