ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்... 20 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்!

ஜவுளி உற்பத்தி
ஜவுளி உற்பத்தி

நூல் விலை ஏற்றம், மின்கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து  ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களின் 20 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பல காலமாக நடந்து வருகிறது.  மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் மார்க்கெட் மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால், சமீப நாட்களாக விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.

அதனால் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காடா துணி உற்பத்தி சார்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர், கோவையில் இன்று முதல் ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் இன்று முதல் 20 நாட்கள் நவ 25-ம் தேதி வரை தொடர்ந்து நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in