இலங்கை கடற்படையினரால் நிம்மதியை இழக்கும் தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 4 பேர் கைது
இலங்கை கடற்படையினரால் நிம்மதியை இழக்கும் தமிழக மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை, மீனவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையால் இந்த தொடர் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 512 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர். இதனை தொடந்து ஒரு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை அவர்கள் சிறை பிடித்தனர்.

மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

ஏற்கெனவே, ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in