32 தமிழக மீனவர்களை விடாமல் விரட்டி கைது செய்த இலங்கை கடற்படை... படகுகளும் பறிமுதல்!

ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள்

ஒரே நாளில் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது தமிழக மீனவர்களின் மத்தியில்  பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை கடற்படை
இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் வங்கக் கடலுக்கு நேற்று காலை மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே  இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மூன்று படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை மறித்து மிரட்டி கைது செய்தனர்.  அவர்களைத் தங்கள் கப்பலில் ஏற்றிக்கொண்டு, படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

அதேபோல மன்னார் கடற்பரப்பில்  இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் அத்துமீறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  அதில் ஒரு படகு பழுதாகி இருந்த நிலையிலும் அதனுடன் சேர்த்து இரண்டு படகுகளை பறிமுதல் செய்து அதிலிருந்து ஏழு மீனவர்களை கைது செய்து கொண்டு சென்றனர். இந்த இரு வேறு சம்பவங்களில் மொத்தம் 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு  மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே 63 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி கடலுக்கு செல்லவே முடியாதோ என்ற நிலையை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தங்களுக்கு பெரும் வேதனை அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in