சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்

எஸ்.எஸ்.பத்ரிநாத்
எஸ்.எஸ்.பத்ரிநாத்

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரான கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயாவின் இந்திய நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் கடந்த 1996ம் ஆண்டில் பத்மபூஷன் பெற்றார். மேலும் பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பிசி ராய் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றார்.

சங்கர நேத்ராலயா மருத்துவமனை
சங்கர நேத்ராலயா மருத்துவமனை

சென்னையில் பிறந்த இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு கிடைத்த காப்பீட்டுத் தொகையில் மருத்துவப் படிப்பை முடித்தார். சிறுவயதில் ஏற்பட்ட நோய் காரணமாக 7 வயதில் தனது கல்வியைத் தொடங்கிய பத்ரிநாத், மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். லயோலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

1963ம் ஆண்டில், மெட்ராஸ் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியல் படிப்பைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் பணியாற்றினார். 1970ல் இந்தியா திரும்பினார். 1970 முதல் 6 ஆண்டுகள் வரை தன்னார்வ சுகாதார சேவைகளில் பணியாற்றினார்.

எஸ்.எஸ்.பத்ரிநாத்
எஸ்.எஸ்.பத்ரிநாத்

1963ம் ஆண்டில், மெட்ராஸ் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியல் படிப்பைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் பணியாற்றினார். 1970ல் இந்தியா திரும்பினார். 1970 முதல் 6 ஆண்டுகள் வரை தன்னார்வ சுகாதார சேவைகளில் பணியாற்றினார்.

பரோபகாரர்கள் குழுவுடன் சேர்ந்து 1978ம் ஆண்டு சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவு ஆகும். ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in