தடை நீங்கியதால் மே 22-ல் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி!

தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்
தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை நீக்கியது. இந்த தடை உத்தரவைப் பிறப்பித்த மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, தடையை நீக்கியுள்ளதால் வரும் 22-ம் தேதி திட்டமிட்டபடி பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தருமபுரம் ஆதீன திருமமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜையை முன்னிட்டு வரும் 22-ம் தேதி ஆதீன குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்ல மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார்.

பட்டினப் பிரவேச நிகழ்ச்சித் தடைவிதித்த விவகாரம் தமிழகத்தில் கடும் சர்ச்சையாக வெடித்தது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தன. பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலரும் பட்டினப் பிரவேசத்தை நடத்தியே தீருவோம் எனவும் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அவர்களும் தருமபுரம் ஆதீனப் பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் இன்று காலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டினப் பிரவேசத்திற்கு வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளார். தொண்டர்கள் விரும்பித்தான் பல்லக்கு சுமக்கிறார்கள் ”என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக ஆதீனங்களிடம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் தன் தடையை விலக்கிக்கொண்டார். அவருக்கும் இது தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து வழிகாட்டுதல் வந்ததைத் தொடர்ந்தே தடையை விலக்கிக் கொண்டுள்ளார். இதனால் திட்டமிட்டபடி வரும் 22-ம் தேதி, பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in