10 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதல்வருக்கு பரிந்துரை!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்twitter

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கரோனா பாதிப்பு மேலும் அதிகரித்த நிலையில் கடந்த வாரம் முதல் 10 முதல் 12ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனிடையே, 73வது குடியரசு தின விழாவையொட்டி பாரத சாரண சாரணியர் தமிழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கொடியேற்றினார். மேலும் 12 தேசிய விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதோடு 50 ஆண்டுகளுக்கும் மேல் பாரத சாரண சாரணிய இயக்கத்தில் பணியாற்றுவதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ந.முத்துகிருஷ்ணன் என்பவர்களுக்கும் கே.அலமேலு என்பவருக்கும் வழங்கப்பட்டது.

தேசிய கொடியை ஏற்றி வணங்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்
தேசிய கொடியை ஏற்றி வணங்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்twitter

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும். பொதுத் தேர்வுக்கு முன் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா தாள் வடிவமைப்பு முறையில் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கு முன்பு பொதுத்தேர்வுகளின் கேள்வித்தாள் எப்படி இருந்ததோ அப்படியே இந்த ஆண்டும் பொதுத் தேர்வும் நடைபெறும்" என்று கூறினார்.

ஆளுநரின் நீட் ஆதரவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நீட்டை நியாயப்படுத்தும் விதமாகதான் ஆரம்பத்திலிருந்து ஆளுநர் பேசி வருகிறார். ஆனால் நீட் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ஆளுநர் உடனடியாக நீட் மசோதாவை அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எதிர்க்கட்சியாக இருந்தபாேதும், தற்போது முதல்வராக இருந்து வரும் முதல்வர் நீட் தேர்வு கூடாது என்று வலியுறுத்தி வருகிறார். அதற்கான சட்டப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இரு மொழி கொள்கை தான் நம் கொள்கை. அதில் என்றும் பின் வாங்க மாட்டோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in