அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர்!

ஓபிஎஸ், ஈபிஎஸ் புகழாரம்
எம்ஜிஆருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை
எம்ஜிஆருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதைtwitter

“அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்” என்று எம்ஜிஆருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளனர்.

எம்ஜிஆர் 105-வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆருக்கு ஓபிஎஸ் மரியாதை
எம்ஜிஆருக்கு ஓபிஎஸ் மரியாதைtwitter

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில், புரட்சித்தலைவி அம்மா வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து “மீண்டும் அஇஅதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம்” என இந்நாளில் உறுதியேற்போம்! மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர், சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து, கோடிக்கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் புரட்சித்தலைவருக்கு 105-வது பிறந்தநாள் புகழ் வணக்கங்கள்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in