இனி சுழற்சிமுறை இல்லை; எப்போதும்போல பள்ளிகள் செயல்படும்!

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சுழற்சி முறை இல்லாமல் எப்போதும்போல பள்ளிகள் நடைபெறும் என்று கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளோம். அதுகுறித்த ஆலோசனை முடிந்துள்ளது. பிற மாநிலங்களில் எல்லாம் இந்த நடைமுறை வழக்கத்துக்கு வந்துவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் அதைப் பின்பற்ற உள்ளோம். நேரடி வகுப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன.

சுழற்சிமுறை இல்லாமல் எப்போதும்போல பள்ளிகள் நடைபெறும். எங்களுக்கு உள்ள ஒரே சவால், முழுமையாக பாடத்திட்டத்தை முடிப்பதுதான். அதையும் முறியடிப்போம். பிப்ரவரி முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்க அனுமதி கிடைத்தால், வழக்கம்போல மே மாதம் தேர்வுகள் நடைபெறும். முறையான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். தற்போதுவரை தமிழகத்தில் 90 சதவீதத்துக்கு மேல் 15 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகவே, நேரடி பள்ளிகள் மட்டுமன்றி, நேரடி பொதுத் தேர்வுகளும் தமிழகத்தில் கட்டாயம் நடைபெறும்” என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in