
நீலகிரியில் ஆதரவற்ற முதியவர்கள் தாயின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடலுக்கு நடனமாடியதை கண்டு மாவட்ட ஆட்சியர் அருணா கண்கலங்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மேல்கூடலூரில் ஆதரவற்ற முதியவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அம்மாவட்ட ஆட்சியர் அருணா கலந்துகொண்டார். அப்போது அவர், 100 வயதை கடந்த முதியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், "ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா" என்ற பாடலுக்கு முதியவர்கள் நடனம் ஆடினர்.
ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தாலும், அம்மாவை போல் ஆகுமா என்ற வரிகள் ஒலிக்கும் போது, மாவட்ட ஆட்சியர் உணர்ச்சி வசப்பட்டு, தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கண்ணீர்விட்டார். நீண்ட நேரம் தேம்பிய மாவட்ட ஆட்சியரை, அங்கிருந்த முதியவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறி தேற்றினர். இந்த சம்பவம் அங்கிருந்த முதியவர்களை மட்டுமின்றி, பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...