`குரூப்-2 தேர்வர்கள் இதை கவனத்தில் கொள்ளுங்கள்': டிஎன்பிஎஸ்சி தலைவர் முக்கிய அறிவிப்பு!

`குரூப்-2 தேர்வர்கள் இதை கவனத்தில் கொள்ளுங்கள்': டிஎன்பிஎஸ்சி தலைவர் முக்கிய அறிவிப்பு!

குரூப்-2 தேர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் தேர்வர்களுக்கான நெறிமுறைகள் குறித்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய‌ பாலச்சந்திரன், “குரூப் 2 மற்றும் குரூப் 2A ஆகிய தேர்வுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறும். முதல்நிலைத் தேர்வானது 21.05.2022-ம் தேதி காலை 9.30 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறும். தேர்வர்கள் அனைவரும் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 12.30 மணிக்கு தேர்வுகள் முடிவு பெற்றாலும் 12.45 வரை தேர்வர்கள், அந்த அறையிலேயே இருக்க வேண்டும்.

மொத்தம் 11,78,175 பேர் குரூப் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். தற்போது வரை 9.10 லட்சம் பேர் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். ஆண்கள்-4,96,247, பெண்கள் 6,81,880, மூன்றாம் பாலினத்தவர்கள் 48, மாற்றுத் திறனாளிகள் 14,531 என்ற அளவில் தேர்வர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ 1,800 பேர் காத்திருக்கிறார்கள். மொத்த தேர்வர்களில் 79,942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 117 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு நேரங்களில் சோதனை செய்வதற்காக 6,400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னையில் உள்ள 7 தேர்வு மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மிகக் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 மையங்களில் 5,624 பேர் தேர்வு எழுதுகிறார்கள். ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின் தேர்வு 2022 செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in