கணவனுடன் தகராறு: பிறந்த வீடு வந்த மகள் தாயுடன் எடுத்த விபரீத முடிவு!

கணவனுடன் தகராறு: பிறந்த வீடு வந்த மகள் தாயுடன் எடுத்த விபரீத முடிவு!

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் வீட்டுக்கு வந்த மகளும், தன் மகள் நிலை இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தத்தில் அவரது தாயும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  கீழப்புதூரைச் சேர்ந்தவர்கள்  ராஜா சரஸ்வதி தம்பதியினர். இவர்களது மகள் யமுனா 27. இவருக்கு கருத்திவீரன்பட்டியைச்  சேர்ந்த ரவிக்குமார் 32 என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்  திருமணம் நடந்தது. அவர்களுக்கு  ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த  நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் தகராறுகள் மூண்டுள்ளது. இதுகுறித்து  தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும்   கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இருதரப்பு ஊர் பெரியவர்கள் கூடி இந்த விவகாரம் குறித்து  பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லையாம். இந்த நிலையில் நேற்று இரவு  தாயார் சரஸ்வதியும், மகள் யமுனாவும் தங்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளனர்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவலறிந்து, தாய் - மகள் என இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள்  ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்தனர். இதையடுத்து உசிலம்பட்டி போலீஸார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in