அண்ணாமலை பொய் தகவல்களைப் பரப்புகிறார்! : எச்சரிக்கும் செந்தில் பாலாஜி

அண்ணாமலை பொய் தகவல்களைப் பரப்புகிறார்! : எச்சரிக்கும் செந்தில் பாலாஜி

மின்வெட்டு குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நிலக்கரி தட்டுப்பாடு தீர்ந்தது எனச் சொல்ல முடியாது. தேவைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போதும் கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் கையிருப்பில் உள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியா முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. ஏப்ரல், மே மாதங்களை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்தில் 19 நாட்களுக்குரிய நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால், உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும்தான் மின் வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் மின்துறை குறித்த தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எச்சரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in