
கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்று முன்பு காலமானார், இவருக்கு வயது 60.
திருச்சி உறையூரில் பிறந்தவர் சிவ பாலசுப்ரமணியன். கடலியலில் தமிழரின் தொன்மையான வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளை இவர் மேற்கொண்டுவந்தார். இவர் தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.
குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!