உக்ரைனிலிருந்து வந்த கடைசி குழு: முதல்வர் நேரில் வரவேற்பு

இதுவரை 1,860 மாணவ, மாணவிகள் மீட்பு
உக்ரைனிலிருந்து வந்த கடைசி குழு: முதல்வர் நேரில் வரவேற்பு

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் கடைசி குழுவினர் இன்று சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கொடுத்து வரவேற்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தாயகம் திரும்புகின்றனர். இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவை அமைத்தார். இந்த குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் கடைசி குழு, இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்தது. தமிழகம் வந்த மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது, அவர்களின் பயணம் மற்றும் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, இந்த காலத்தில் மாணவர்கள் பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளனர். குறிப்பாக மொழி பிரச்சினையை சந்தித்தனர். உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்தவுடன் தமிழக அரசு அதிகாரிகள் உதவினர்" என்றார். தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in