`உக்ரைனில் படிப்பை தொடர சாத்தியமில்லை; நடவடிக்கை எடுங்கள்'

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் கடிதம்
`உக்ரைனில் படிப்பை தொடர சாத்தியமில்லை; நடவடிக்கை எடுங்கள்'

ரஷ்யா- உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய மாணவர்களின் படிப்பு சீர்குலைந்துள்ளது. அவர்களின் எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் சென்று படிப்பை தொடர்வது சாத்தியமில்லை என்றும் நாடு திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர உடனடி தீர்வு தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களின் படிப்பு விவகாரத்தில் இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு ஆதரவு தரும் என உறுதியளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை தொடர்வதில் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையை தீர்க்க பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் எனவும் போா் நிறுத்தப்பட்டாலும் பல்கலைக்கழகங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையிலும் நிச்சயமற்ற தன்மை நிலவும் எனவும் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in