ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிடமாற்றம்

தமிழகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நிமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலன், மகளிர் உரிமைத் துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக ராஜகோபால் கங்கராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஐஏஎஸ் அதிகாரிகள் சிம்ரன்ஜீத் சிங் கலான் மதுரை மாநகராட்சி ஆணையராகவும், பிரதாப் கோவை மாநகராட்சி ஆணையராகவும், வைத்தியநாதன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், தற்பகராஜ் ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், சிவகிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும், ஆனந்த்மோகன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பாராத நேரத்தில் இப்படி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in