கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதில், வேலூரில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, வேலூரில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, கனமழையை முன்னிட்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். எனினும், 6-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் காலை மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in