
முதல் முறையாக பார்லி வகை தானியங்கள் மூலம் தமிழகத்தில் பீர் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மி.லி, 375 மி.லி அளவுகளில் கிடைக்கும். பீர் பிரியர்களின் மத்தியில் சூப்பர் ஸ்ட்ராங் பீர் என்ற புதிய வகை நல்ல வரவேற்பை பெறும் என டாஸ்மாக் நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.
650 மி.லி ரூ. 200க்கும் 325 மி.லி ரூ.100க்கும் கிடைக்கும். மேலும் சிறிய வகை டின்களில் இந்த வகை பீர் கிடைக்கும் என்றும், சில நாட்களில் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மது பிரியர்களுக்கு பொதுவாக பீர் என்றாலே அலாதியான ஆர்வம் ஏற்படும். எந்த வகை பீர் விற்பனைக்கு வந்தாலும் அதை உடனே வாங்கி ருசித்து பார்த்து விடுவார்கள். அவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் தற்போது தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பீர் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இது டாஸ்மார்க் விற்பனையில் மேலும் ஒரு சாதனையைப் படைக்கும் என மது பிரியர்களும், டாஸ்மாக் நிர்வாகமும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!