அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு... ஒரே நேரத்தில் குவிந்த 60,000 பேர்! இணையதளம் முடங்கியது!

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு... ஒரே நேரத்தில் குவிந்த 60,000 பேர்! இணையதளம் முடங்கியது!

அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 615 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று  ஒரே நேரத்தில் 60 ஆயிரம் பேர் இணையதளத்தில் உள் நுழைந்ததால் போக்குவரத்து கழக இணையதள பக்கம்  செயலிழந்தது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி காலியான 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள்  இணையதளம் மூலமாக  இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது.

http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பயனாளிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் அந்த பக்கத்தில் உள் நுழைந்தனர். அதனால்  விண்ணப்பம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது.

ஒரே நேரத்தில் அதிகம் பேர் உள் நுழைந்ததால் பக்கம் முடக்கம் ஆகி உள்ளதாகவும், இணையதளத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in