கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக 12 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக
12 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாகக்கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், " இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மார்ச் 29-ம் தேதி முதல் நேற்று வரை இலங்கை கடற்படையினரால் மூன்றாவது முறையாக நமது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் 7 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். தற்போது 12 மீனவர்களைக் கைது செய்துள்ளனர். எனவே, இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in