பிப். 9 முதல் திருப்புதல் தேர்வு!- 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிப். 9 முதல் திருப்புதல் தேர்வு!- 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

``தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு வரும் 9ம் தேதி நடைபெறும்'' என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு வரும் 9ம்தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும். அதேபோல் பிளஸ்2 மாணவர்களுக்கு 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை தேர்வுத்துறையின் அனைத்து வகை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ? அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வை நடத்தும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வேறு பள்ளியில் மேற்கொள்ளப்படும். மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் இதுபோன்ற திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் வரும் பொதுத்தேர்வில் அச்சமின்றி தேர்வு எழுதலாம்" என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in